சம் சம் சம் சம் சம் சம் சம் சம்…
ஆ…
வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
தனனன ஏஏ ஆ…தனனன ஏஏ ஆ…
கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் வந்தே தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கதைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌளர்ணமியே ஒளியாதே
பேரே கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா
(வண்ணனிலவே)
கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நன் ஆனால் உன் வாசல் வருவேனே
உன் மீதே மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ
(வண்ணனிலவே)
0 comments:
Post a Comment