ஓ..ம் நமோ நாராயணாயா…
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்ஷரம் பார்க்காது
ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
வீர சைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோர்க்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலக்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜதர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளக்கனைக்கும்
வென்னிலாவை அது அனைத்திடுமா
கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த
வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்தால் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
Jul
7
0 comments:
Post a Comment