நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்

படம் : முள்ளும் மலரும்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் - கே ஜே ஏசுதாஸ்
இசை - இளையராஜா
வெளியான ஆண்டு : 1978




செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்


வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா


அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
செந்தாழம்பூவில்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்




படம் : ராஜபார்வை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
----------------------------------------------------------

ஆ:
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
(அந்தி)

பெ:
தேனில் வண்டு மூழ்கும்போது,....
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!

ஆ:
தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
(அந்தி)

ஆ:
தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!

பெ:
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!
(அந்தி)

பெ:
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
(அந்தி)



படம் : காதலர் தினம்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வாலி
குரல் : உன்னி மேனன்
------------------------------------------------------
என்ன விலை அழகே?
என்ன விலை அழகே?
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்,
விலை உயிரென்றாலும் தருவேன்.
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்.
ஒரு மொழியில்லாமல் மெளனமாகிறேன்.
(என்ன)

படைத்தான் இறைவன் உனையே!
மலைத்தான் உடனே அவனே!
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது, என் விழி சேர்ந்தது.
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீணை உன் மேனி, மீட்டட்டும் என் மேனி.
விரைவினில் வந்து கலந்திடு!
விரல் பட மெல்ல கனிந்திடு!
உடல் மட்டும் இங்கு கிடக்குது!
உடன் வந்து நீயும் உயிர் கொடு!
பல்லவன் சிற்பிகள் அன்று,
பண்ணிய சிற்பத்தில் ஒன்று,
பெண்ணென வந்தது இன்று! சிலையே!
(பல்லவன்)

உந்தன் அழகுக்கில்லை ஈடு!
(என்ன)

உயிரே உனையே நினைந்து,
விழிநீர் மழையில் நனைந்து,
இமையில் இருக்கும் இரவு உறக்கம்,
கண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு.
நிலவு எரிக்க, நினைவு கொதிக்க,
ஆராத நெஞ்சாச்சு, ஆகாரம் நஞ்சாச்சு.
தினம் தினம் உனை நினைக்கிறேன்,
துரும்பென உடல் இளைக்கிறேன்.
உயிர் கொண்டு வரும் பதுமையே!
உனைவிட இல்லை புதுமையே!
உன் புகழ் வையமும் சொல்ல,
சித்தன்ன வாசலில் உள்ள,
சித்திரம் வெட்குது மெல்ல! உயிரே!
(உன் புகழ்)

உனை நானும் சேரும் நாள் தான்!
(என்ன)



படம் : உயிரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி மேனன் & சுவர்ணலதா
-------------------------------------------------------------------

பெ:

ஓ!
கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
பூங்காற்றிலே, உன் சுவாசத்தை,
தனியாகத் தேடிப் பார்த்தேன்.
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே,
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
உயிரின் துளி காயும் முன்னே,
என் விழி உனை காணும் கண்ணே!
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

ஆ:
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா? நெஞ்சு நனைகின்றதா?
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)

பெ:
கண்ணில் ஒரு வலியிருந்தால்...கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை

ஆ:
வானம் எங்கும் உன் பிம்பம் - ஆனால்
கையில் சேரவில்லை - காற்றில்
எங்கும் உன் வாசம் - வெறும்
வாசம் வாழ்க்கையில்லை!
உயிரை வேரோடு கிள்ளி,
என்னைச் செந்தீயில் தள்ளி,
எங்கே சென்றாயோ கள்ளி,
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!
(பூங்காற்றிலே)



படம் : சிகரம்
இசை : S.P.பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து
குரல் : K.J.ஜேசுதாஸ்
----------------------------------------------------------


அகரம் இப்போ சிகரம் ஆச்சு!
தகரம் இப்போ தங்கம் ஆச்சு!
காட்டு மூங்கில், பாட்டுப் பாடும்,
புல்லாங்குழல் ஆச்சு!
சங்கீதமே சந்நிதி....
சந்தோஷம் சொல்லும் சங்கதி!

(சங்கீதமே)

(அகரம்)

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும், கரை ரெண்டும் வாழும்.
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய்யன்பு போகும், மெய்யன்பு வாழும்.
அன்புக்கு உருவமில்லை!
பாசத்தில் பருவமில்லை!
வானோடு முடிவுமில்லை!
வாழ்வோடு விடையுமில்லை!
இன்றென்பது உண்மையே.....
நம்பிக்கை உங்கள் கையிலே!

(அகரம்)

தண்ணீரில் மீன்கள் வாழும்.
கண்ணீரில் காதல் வாழும்.
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே!
பசியாற பார்வைபோதும்!
பரிமாற வார்த்தை போதும்!
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்!
தலைசாய்க்க இடமாயில்லை!
தலை கோத விரலாயில்லை!
இளங்காற்று வரவாயில்லை!
இளைப்பாறு பரவாயில்லை!
நம்பிக்கையே நல்லது.....
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!

(அகரம்)



படம் : மெளனராகம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------------

மன்றம் வந்த தென்றலுக்கு,
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே! என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்
(மன்றம்)

தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!
(மன்றம்)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல,
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல!
ஓடையைப் போலே உறவும் அல்ல,
பாதைகள் மாறியே பயணம் செல்ல!
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!
(மன்றம்)




படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)

வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!
(கல்யாணமாலை)



படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
---------------------------------------------------------------

பொன்மாலைப் பொழுது!
இது ஒரு பொன்மாலைப் பொழுது!
வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்!
(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்!
பாடும் பறவைகள் தாளமிடும்!
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!
ஒரு நாள் உலகம் நீதி பெறும்!
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்!
(இது ஒரு)



படம் : திருடா திருடா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : மனோ & குழு
--------------------------------------------------------------

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
காதல் என்று அர்த்தம்!
கடலை வானம் கொள்ளையடித்தால்,
மேகம் என்று அர்த்தம்!
பூவை வண்டு கொள்ளையடித்தால்,
புதையல் என்று அர்த்தம்!
புதையல் என்னைக் கொள்ளையடித்தால்,
மச்சம் என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)

பறவைகள் தோன்றினால்,
வானில் பெளர்ணமி என்று அர்த்தம்!
பாற்கடல் பொங்கினால்,
நதிகள்பக்கம் என்று அர்த்தம்!
ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால்,
லூசு என்று அர்த்தம்!
அழகுப் பெண்ணின் தாயார் என்றால்,
அத்தை என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)

தாவிடும் ஓடைகள்,
நதியின் தங்கைகள் என்று அர்த்தம்!
தூறிடும் தூறல்கள்,
மழையின் தோழிகள் என்று அர்த்தம்!
இரவின் மீது வெள்ளையடித்தால்,
விடியல் என்று அர்த்தம்!
எதிரி பேரைச் சொல்லியடித்தால்,
வெற்றி என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)



படம் : நந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : பழனிபாரதி
குரல் : S.P.பாலசுப்ரமணியம் & மால்குடி சுபா
--------------------------------------------------------------

ஆ:
முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!
(முன் பனியா)

பெ:
மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

ஆ:
என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!
(முன் பனியா)

பெ:
சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....!

ஆ:
என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!
(முன் பனியா)



படம் : அன்பே சிவம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து
குரல் : கமல்ஹாசன்&குழு
---------------------------------------------------------------
ஆ:
யார் யார் சிவம்? நீ, நான், சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
(யார்)
ஆ:
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!
கு:
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! என்றும்,
அன்பே சிவம்! அன்பே சிவம்! எங்கும்...!
(யார்)
ஆ:
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்!
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!
(அன்பே)
(யார்)
ஆ:
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா!
(அன்பே)
(யார்)



படம் : கேப்டன் மகள்
இசை : ஹம்சலேகா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
--------------------------------------------------------
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ?
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது!
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா?
தெரித்து ஓடுதே அதுவா?
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன் !
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா?
தள்ளி உள்ளதே அதுவா?
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடுவுகின்றதே அதுவா?
தடுவுகின்றதே அதுவா?
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா?
ஓரிரு வார்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னை தொடமாட்டேன்!
(எந்த பெண்ணிலும்)



படம் : கடலோரக்கவிதைகள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : இளையராஜா & S.ஜானகி


பெ:
அடியாத்தாடி
அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?
அடியம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா?
ஆ:
உயிரோடு
பெ:
உறவாடும்
ஆ:
ஒரு கோடி ஆனந்தம்
பெ:
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆ:
ஆ....அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?அடியம்மாடி.....

பெ:
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
உன்னப்பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டி பாடாதோ?
ஆ:
இப்படி நான் ஆனதில்லை, புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை, மூக்கு நுனி வேர்த்ததில்லை
பெ:
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பாத்தாயோ?
எச கேட்டாயோ?

லலலலலா...லலலலலா...

ஆ:
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்?
பெ:
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன?
ஆ:
கட்டுத்தறி காளை நானே, கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!
(அடியாத்தாடி)

படம் : உழவன் (1993)
பாடல் துவக்கம் : மாரி மழை பெய்யாதோ …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் :சித்ரா, ஷஹுல் ஹமீது

கவள தண்ணி …
இறக்கு மச்சான் …
ஏற பூட்டி …
உழுது வச்சான் …
வித்து நெல்ல எடுத்து வச்சான்
விதைக்க நாளும் காத்திருந்தான்

மாரி மழை பெய்யாதோ …
மக்கள் பஞ்சம் தீராதோ

மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்
வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே
(மாரி மழை …)

சட்டியில மாக்கரச்சு
சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை
கோடை மழை பெய்யாதோ
மானத்து ராசாவே
மழை விரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ
சாரல் மழை பெய்யாதோ

வடக்கே மழை பெய்ய
வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய

கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்
நல்ல நெல்லு கதிரறுத்து
புள்ள நெளி நெலியா கட்டு கட்டி
அவ கட்டு கட்டி போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படக்க
(மாரி மழை …)

வரப்புல பொண்ணிருக்கு
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கையா நீ எப்போ புடிப்பா

வெதைஎல்லாம் செடியாகி
செடியெல்லாம் காயாகி
காய வித்து உன் கையா புடிப்பேன்

புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தலதலன்னு வளந்த புள்ள

ராத்தவலையெல்லாம் குலவை இட
நான் தாமரை உன் மடி மேல

கனவுகள் பலிக்கணும்
கழனியும் செழிக்கனும்
வானம் கரு கருக்க
(மாரி மழை …)



பாடல் : சங்கீத ஸ்வரங்கள்
படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி
குரல் : எஸ்.பி.பி

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா

சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது

சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்



நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புக்ள்
என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
(நறுமுகையே..)

யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ


ஹேய் ஹேய் ஹேய்
ஒர் உண்மை சொன்னால்
ஹேய் ஹேய் ஹேய்
நேசிப்பாயா,,?

நெஞ்சமெல்லாம் காதல்
தேகம் எல்லாம் காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா,,?

காதல் கொஞ்சம் கம்மி
காமம் கொஞ்சம் தூக்கல்
மஞ்ஜத்தின் மேல்
என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால்
நேசிப்பாயா,,?
மஞ்ஜத்தின் மேல்
என்னை மன்னிப்பாயா?
(உண்மை)

நேசிப்பாயா,,நேசிப்பாயா,,நேசிப்பாயா,,நேசிப்பாயா,,

பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தன்டில் மின்னல் வெட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ள பெருக்கு
பாசங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு
(உண்மை சொன்னால்)

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லம் மார்கழி தான்
என் கனவெல்லம் கார்திகை தான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தம் இல்லை
(ஒர் உண்மை சொன்னால்)



நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எரிய
பெண்னே உன்னால் முதிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

(நினைவுகள்)

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
(நினைவுகள்)



அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா


நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....


தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

(காலங்களில் அவள்)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை - அவள்
கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள்)


படம் : பாவ மன்னிப்பு
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்



தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை
மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு
படுத்து கொண்டேன்
பகலில் தூங்கிவிட சொல்வேன்
இரவில் விழித்திருக்க சொல்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ


சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்



ஓ..ம் நமோ நாராயணாயா…
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்ஷரம் பார்க்காது

ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது

வீர சைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோர்க்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலக்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் நான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜதர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கனைக்கும்

வென்னிலாவை அது அனைத்திடுமா
கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த
வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்தால் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது



கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ?
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ ?

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம் , இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் , கடவுளின் ரகசியம்

உலகே மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவா இனி மழை வரும் ஒசை ஆ ...

(காண காணும் காலங்கள் ...)

நனையாத காளுக்கேல்லாம் , கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ ...

(கனா காணும் காலங்கள் ...)

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்த்தி வேலை அழைக்கிரத எ
அதி காலை நேரம் எல்லாம் , தூங்காமல் விடிகிரதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

பட படைப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன் ?
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிக கொடுமை

(கனா காணும் காலங்கள் ...)



நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....




அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

நீராட்டும் நேரத்தில் என்னன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண் ர் என் தண்
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு



படம் : மின்சாரக் கனவு
பாடல் : கவியரசு வைரமுத்து
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
இசை : ஏ.ஆர். ரகுமான்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே!

கோரஸ் : புகழ் மைந்தன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

-அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..




சம் சம் சம் சம் சம் சம் சம் சம்…
ஆ…

வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
தனனன ஏஏ ஆ…தனனன ஏஏ ஆ…

கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் வந்தே தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கதைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌளர்ணமியே ஒளியாதே
பேரே கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா

(வண்ணனிலவே)

கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நன் ஆனால் உன் வாசல் வருவேனே
உன் மீதே மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

(வண்ணனிலவே)



படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
(மல்லிகைப் பூவே..)

சின்ன சின்ன கைகளிலே ட்
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில்
பச்சைக்கிளி கூட்டம்
என்ன சொல்லி பறக்கிறது?
நம்மை கண்டு நானி
இன்னும் கொஞ்ச தூரம்
தள்ளி தள்ளி போகிறது
எங்களின் கதை கேட்டு
தலையாட்டுது தாமரைப்பூ
மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
(மல்லிகைப் பூவே..)

அலைகள் வந்து மோதாமல்
கடலில் கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும்
எங்கள் சொந்தம் உடையாது
சுற்றி சுற்றி வருதே
பட்டு தென்றல் காற்று
இங்கே இங்கே பார்க்கிறது
மொட்டு விடும் மலரை
காஞ்சி பட்டு நூலில்
கட்டி தர கேட்கிறது
வேலிகள் கிடையாது
எந்த வெள்ளமும் நெருங்காது
நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
(மல்லிகைப் பூவே..)

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)

(அடி ரக்கம்மா)

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு

(ஜாங்குஜக்குச்)

வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு?
நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து
பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்…பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு
அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

(ஜாங்குஜக்குச்)

படம்தசாவதாரம்

பாடல்;

முகுந்தா முகுந்தா

******************************************

 

முகுந்தா முகுந்தா

 

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா

பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

என்ன செய்ய நானோ தோல் பாவைதான்

உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

 

நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி

நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி

பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்

கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்

உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது

அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது

அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை

உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை

வாராது போவாயோ வாசுதேவனே

வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே

ஜெய்..முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

 

மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்

கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்

வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்

நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்

ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்

கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்

இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்

உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே

மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே

மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

 

உசுரோடு இருக்கான் நான் பெற்ற பிள்ளே

ஏனோ இன்னும் தகவல் வரலே..

வானத்தில் இருந்து வந்து உதிப்பான்

சொன்னால் கேளுங்க அசடுகளே

வாடா மன்மதா… அழகா வாடா

உடனே வாடா …. வாடா…..

கோவிந்தா கோபாலா….)

 

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா

வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்

ம்ம்..ம்ம்….

 

Followers

Total Pageviews

Blog Archive