நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்



படம் : திருடா திருடா
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : மனோ & குழு
--------------------------------------------------------------

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
காதல் என்று அர்த்தம்!
கடலை வானம் கொள்ளையடித்தால்,
மேகம் என்று அர்த்தம்!
பூவை வண்டு கொள்ளையடித்தால்,
புதையல் என்று அர்த்தம்!
புதையல் என்னைக் கொள்ளையடித்தால்,
மச்சம் என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)

பறவைகள் தோன்றினால்,
வானில் பெளர்ணமி என்று அர்த்தம்!
பாற்கடல் பொங்கினால்,
நதிகள்பக்கம் என்று அர்த்தம்!
ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால்,
லூசு என்று அர்த்தம்!
அழகுப் பெண்ணின் தாயார் என்றால்,
அத்தை என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)

தாவிடும் ஓடைகள்,
நதியின் தங்கைகள் என்று அர்த்தம்!
தூறிடும் தூறல்கள்,
மழையின் தோழிகள் என்று அர்த்தம்!
இரவின் மீது வெள்ளையடித்தால்,
விடியல் என்று அர்த்தம்!
எதிரி பேரைச் சொல்லியடித்தால்,
வெற்றி என்றே அர்த்தம்!அர்த்தம்!
(கண்ணும்)

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

Blog Archive