நேயர் விருப்பம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்



படம் : கடலோரக்கவிதைகள்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : இளையராஜா & S.ஜானகி


பெ:
அடியாத்தாடி
அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?
அடியம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா?
ஆ:
உயிரோடு
பெ:
உறவாடும்
ஆ:
ஒரு கோடி ஆனந்தம்
பெ:
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
ஆ:
ஆ....அடியாத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டிப் பறக்குது சரிதானா?அடியம்மாடி.....

பெ:
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
உன்னப்பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டி பாடாதோ?
ஆ:
இப்படி நான் ஆனதில்லை, புத்தி மாறிப் போனதில்லை
முன்ன பின்ன நேர்ந்ததில்லை, மூக்கு நுனி வேர்த்ததில்லை
பெ:
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பாத்தாயோ?
எச கேட்டாயோ?

லலலலலா...லலலலலா...

ஆ:
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளா ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்?
பெ:
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன?
ஆ:
கட்டுத்தறி காளை நானே, கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!
(அடியாத்தாடி)

0 comments:

Post a Comment

Followers

Total Pageviews

Blog Archive